இலங்கையில் புத்தாண்டில் புதிய வரிகள்!

அரசாங்க உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய கலால் நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் சந்தர்ப்பத்தில் மக்களுக்கு சுமையாக இருக்கும் வரிகளை திருத்தியமைக்க தாம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *