அணுகுண்டு தாக்குதல் அச்சம் – அதிக மாத்திரைகளை வாங்கி குவிக்கும் நாடுகள்!

உக்ரைன் – ரஷ்யா போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தற்போது பொட்டாசியம் அயோடைடை வாங்குவதில் மும்முரமாக உள்ளதென தெரியவந்துள்ளது.

இதனால் அணுசக்தி தாக்குதல்களைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது

உக்ரைன்-ரஷ்யா போர், கொரியா தகராறு மற்றும் உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பல நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. 

ரஷ்யாவும் அணுகுண்டு தாக்குதல் நடத்தலாம் என பலமுறை எச்சரித்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. இந்த அணுஆயுத தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொட்டாசியம் அயோடைடு அணுசக்தி தாக்குதலுக்குப் பிறகு கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் மருந்து என்று கூறப்படுவதால், பல நாடுகளில் பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. 

பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளை வாங்க அமெரிக்கா இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

2,389 கோடி செலவில் இந்த அயோடின் மாத்திரைகளை வாங்குவதாக அமெரிக்காவின் ஜோ பைடன் அரசாங்கம் ஒக்டோபர் 2ஆம் திகதியன்று தெரிவித்தது. 

அணு ஆயுத தாக்குதல், ரசாயன தாக்குதல், உயிரியல் தாக்குதல், கதிரியக்க தாக்குதல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்றும், அதனால்தான் இவை பெரிய அளவில் வாங்கப்படுவதாகவும் ஜோ பிடன் அரசு தெரிவித்துள்ளது.

பொட்டாசியம் அயோடைடு, அயோடின் மருந்து என்றும் அழைக்கப்படுகிறது. அணுகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்த மருந்தினால் கதிரியக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. உண்மையில், அணுகுண்டு வெடித்த பிறகு, கதிரியக்க உறுப்பு I-131 என்ற அளவில் மிதக்கத் தொடங்குகிறது.

இது சுவாசத்தின் மூலம் மனித உடலில் நுழைகிறது. இதனால், தைராய்டு புற்றுநோய், லுகேமியா, மனநல கோளாறுகள் ஏற்படும். தொண்டை மற்றும் உடலின் பிற பகுதிகளில் கட்டிகள் உருவாகும்.

பொட்டாசியம் அயோடைடு என்பது, I-131 இலிருந்து மக்களைக் காப்பாற்ற மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. 

இது பொட்டாசியம் மற்றும் அயோடைடு கலந்து தயாரிக்கப்படுகிறது. அயோடினில் மொத்தம் 37 வகைகள் உள்ளன. இதில், அயோடின்-127 மட்டுமே நமக்கு நேரடியாக தீங்கு செய்ய முடியாது. அதே நேரத்தில், அணுகுண்டிலிருந்து வெளிப்படும் I-131 இன் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது, இது பல தலைமுறைகளை தாக்கும் வீரியம் கொண்டது.  

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பொட்டாசியம் அயோடைடில் கதிரியக்கத்தன்மை இல்லாத அயோடின் உள்ளது. யாராவது அதை சாப்பிட்டால், அயோடின் குறைந்த அளவு உங்கள் உடலில் நுழைகிறது. 

அணுசக்தி தாக்குதலின் போது உங்கள் உடலுக்குள் செல்லும் அயோடின்-131 என்ற நஞ்சை அகற்ற, இந்த மருந்து பயனுள்ளதாக கருதப்படுகிறது. இது தவிர, I-131 காரணமாக உருவாகும் கட்டியை அகற்றவும் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம்.

எப்படியிருப்பினும், அணுசக்தி தாக்குதல் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்போது இந்த மருந்து முழுமையாக பயனுள்ளதாக இருக்காது, ஏனெனில் மனித உடலுக்குள் செல்லும் அயோடின் அளவு மிக அதிகமாக இருக்கும். இது 1986 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் வெடித்த போது பயன்படுத்தப்பட்டது. இந்த மருந்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

இதுதவிர கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் புகுஷிமா அணுமின் நிலையம் சேதம் அடைந்தபோது, ஜப்பானும் இந்த மருந்துகளை அதிக அளவில் வாங்கி பயன்படுத்தியது.

உக்ரைனை ஒட்டிய நாடான போலந்திலும் அயோடின் மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. நாட்டின் மொத்த மக்கள் தொகையான 34 லட்சம் பேருக்கு போலந்து அரசு 55 லட்சம் மாத்திரைகளை அனுப்பியுள்ளது. போலந்தின் அனைத்து மாநிலங்களிலும் இந்த மருந்தை விநியோகிக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் அயோடின் மாத்திரைகளை அதிக அளவில் வாங்குகின்றன. 5.5 மில்லியன் அயோடின் மாத்திரைகள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சமீபத்தில், விளாடிமிர் புடின் வெளியிட்ட கருத்துகளும், அறிக்கைகளும் அயோடினின் விற்பனையை அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *