குஜராத்தில் முஸ்லிம்களை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொலிஸார்!
குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நவராத்திரி கர்பா நிகழ்ச்சியில் கற்களை வீசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சில முஸ்லீம்களை பொலிஸ் அதிகாரிகள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இது குறித்த காணொளி ட்விட்டரில் வைரலாகி வருகின்றன. சிவில் உடையில் வந்த பொலிசார் அந்த ஆட்களை தாக்குவதை அதிகாரிகள் பார்த்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர்.
உள்ளூர் செய்தி நிறுவனமான VTV குஜராத்தி நியூஸும் அந்த காணொளியை பகிர்ந்துள்ளது.