எலிசபெத் மகாராணியின் மரணம் வானில் தோன்றிய அதிசயம்!

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் மரணமடைந்த தகவல் வெளியான வேளையில் பக்கிங்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் உருவாகியுள்ளது பார்வையாளர்களை உருக வைத்துள்ளது.

பிரித்தானிய ராணியாரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக செய்தி வெளியானதால், அரண்மனைக்கு வெளியே பொதுமக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் சோகமான சூழலுக்கு ஏற்றவாறு சில மணி நேரங்களுக்கு முன்புதான் அங்கு மழை பெய்தது என்பதால் குளிர்ச்சியான வானிலை காணப்பட்டது. இந்த நிலையில்தான் அங்கு திடீரென வானவில் தோன்றியது.

சரியாக பக்கிம்ஹாம் அரண்மனை மீது இரட்டை வானவில் அங்கு தோன்றியது. இதை பார்த்ததும் அங்கு திரண்டிருந்த மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *