வீட்டிலிருந்த பியரை பாடசாலையில் சக மாணவிகளுடன் பருகிய 8 ஆம் வகுப்பு மாணவி!
தரம் 8 இல் கல்வி பயிலும், மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருக்கியுள்ளனர்.
இவ்வாறான சம்பவமொன்று காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் ஆசிரியர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையிலேயே விடயம் தெரியவந்துள்ளது.
மாணவி பாடசாலைக்கு எவ்வாறு பியர் எடுத்து வந்தா, அதை பாடசாலை நேரத்தில் பருகியது எப்படி? பாடசாலை நிர்வாகம் என்ன செய்து கொண்டிருக்கிறது என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.