மின்சார கட்டணம் 75 வீதத்தால் அதிகரிப்பு!

மின்சாரக் கட்டணம் 75 வீதத்தினால் அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணம் ஒட்டுமொத்தமாக 75 வீதத்தினால் இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கீழ்வரும் அலகுகளின் அடிப்படையில் மின்கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

0-30 அலகுகள்- 264%
31-60 அலகுகள்- 211%
61-90 அலகுகள்- 125%
91-120 அலகுகள்- 89%
121-180 அலகுகள்- 79%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *