மனைவியைக் கொலை செய்து கொதிக்க வைத்த கணவர்!

பாகிஸ்தானில் மனைவியை கொன்று கொப்பரையில் போட்டு கொதிக்கவைத்த கணவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கராச்சியில் உள்ள ஒரு பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வரும் ஆஷிக் தனது மனைவி நர்கீசை தலையணையை அமுக்கி கொலை செய்ததோடு,உடலை பள்ளி சமையலறை அடுப்பில் உள்ள கொப்பரையில் வைத்து கொதிக்கவைத்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஆஷிக்கின் குழந்தைகள் அளித்த புகாரின் பேரில் நர்கீசின் உடலை கைப்பற்றிய காவல்துறை, ஆஷிக் எதற்காக மனைவியை கொலை செய்தார் என விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *