இராஜினாமா கடிதத்தை அனுப்பினார் கோட்டா?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைத்துள்ளதாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்றிரவு (14) அல்லது நாளை அதிகாலை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.