காணாமல் போன முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பைபிள் காணாமல் போன நிலையில் தற்பொழுது லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
17-ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முதலாக மொழி பெயர்த்துள்ளார்.
தஞ்சை மியூசியத்தில் இருந்து 2005ல் காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
உலகம் முழுவதும் புராதன பொருட்கள் இருக்கும் இணையதளங்களை ஆய்வு மேற்கொண்டதில் பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்ந்து லண்டனில் உள்ள பைபிளை, யுனெஸ்கோ ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.