தேநீருக்கு பதிலாக சர்பத்தைப் பருகுங்கள்; பொது மக்களுக்கு அரசு வேண்டுகோள்!
அண்மைக்காலமாகப் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது.
இதன் காரணமாக தேயிலையின் இறக்குமதிச் செலவை கட்டுப்படுத்தும் நோக்கில், தேநீர் அருந்துவதைக் குறைத்துக் கொள்ளுமாறு மக்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்து வருவதோடு தேனீருக்குப் பதிலாக லஸ்சி மற்றும் சர்பத் போன்ற பானங்களைப் பருகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கையானது வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு வருமானத்தையும் ஈட்டித் தரும் என்று எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.