சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கை!

சடலமாக மீட்கப்பட்ட அட்டலுகம சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து, அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வீசியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுமி நேற்று மாலை முதல் காணாமல்போனதாக பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே சிறுமி இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *