புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் கலந்துரையாடல் IMF தெரிவிப்பு!
இலங்கையுடன் தொழில்நுட்பத்தின் ஊடான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
மே 9 ஆம் திகதி முதல் இந்தப் கலந்துரையாடல் ஆரம்பமாகி மே 23 ஆம் திகதி வரை தொடரும் என IMF இன் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் Masahiro Nosaki தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் கொள்கை விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.