சமல் ராஜபக்சவின் அலுவலகம் மீது தாக்குதல்!
நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவின் திஸ்ஸமஹாராம அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காலிமுகதிடலில் கோட்டா கோ கம மீது நேற்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபக்ச மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்சவின் திஸ்ஸமஹாராம அலுவலகம் மீது சரமாரியான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.