இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா 4வது டோஸ்!

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் நான்காவது அளவினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி ,அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.

மேலும் ,எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 4 ஆவது அளவினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *