மஹிந்த பதவி விலகமாட்டார் தினேஷ் தெரிவிப்பு!
ஆளும் கட்சி பாராளுமன்றக் குழுக்கூட்டம் இன்று (04) நடைபெற்றது. அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.
அந்தக் கூட்டத்தில் வைத்து, தாம் இராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் நாளை அல்லது நாளை மறுதினம் அறிக்கை வெளியிடுவேன் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.