சுகாதார அமைச்சர் மக்களிடம் விஷேட கோரிக்கை!

மருந்துகளை கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைவாக, 1999 என்ற சுவசெரிய அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தனக்கு மருந்துகளை பெற்றுக் கொள்வதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் அது தொடர்பில் தெரிவிக்க முடியும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

இதனூடாக மருந்துகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொள்ளமுடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *