நோன்புப் பெருநாள் 03 ஆம் திகதி கொண்டாட தீர்மானம்!
இலங்கையில் எந்த பாகத்திலும் புனித சவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படவில்லை.
இதனால் மே 02ம் திகதியும் நோன்பு நோற்று 30ம் நாளாகப் பூர்த்தி செய்து, மே மாதம் 03ம் திகதி நோன்பு பெருநாளைக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய தலைப்பிறை பார்க்கும் குழு இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அறிவித்துள்ளது