காலிமுகத்திடல் போராட்ட களத்தில் மஹிந்த!
காலிமுகத்திடலில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று 14ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கிறது.
இந்நிலையில், இன்றைய போராட்டக் களத்தில் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பங்கேற்றுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அவரும் அரசுக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.