போராட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் பொதுபல
சேனா அறிக்கை!

கோல்பேஸ் போராட்டங்களில் நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் – இ – இஸ்லாமியர்களை அடையாளம் கண்டுள்ளதாக பொதுபல சேனா (BBS) தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தின் முழக்கங்களை எதிர்த்துப் போராடுவது என்ற போர்வையில் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *