ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொலிஸ் அதிகாரி அனுமதியின்றி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கைப் பொலிஸாருக்கு கடும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *