உக்ரைன் பெண்களை பயன்படுத்த ரஷ்ய வீரருக்கு அனுமதி வழங்கிய மனைவி!
உக்ரைன் பெண்களை பயன்படுத்தி போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்ய வீரர் ஒருவரின் மனைவியே வன்கொடுமை செய்ய அனுமதியளித்துள்ள ஆடியோ இணையத்தில் வெளியாகி உலகநாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ரஷ்ய ராணுவம்
சமீபத்தில் பெண்களை தவறாக பயன்படுத்தும் யுக்தியை கையில் எடுத்துள்ளது. உக்ரைனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
குழந்தைகள் முன்னபே அவர்களது தாயை கத்தி, துப்பாக்கிகளை காண்பித்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவது, 9 வயது சிறுமியை 11 ரஷ்ய ராணுவ வீரர்கள் இணைந்து வன்கொடுமை செய்தது என தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றனர்