ஜனாதிபதி சுதந்திர கட்சி இடையிலான பேச்சு வார்த்தை என்ன நடந்தது?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் நேற்று (05) பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.தயாசிறி ஜயசேகர, கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், தாம் தொடர்ந்தும் சுயாதீனமாக பாராளுமன்றத்தில் செயற்படவுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *