நேற்று பதவி ஏற்ற அலி சப்ரி இன்று பதவி துறந்தார்!

புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலிசப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அவர் விரிவான கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அமைச்சரவை பதவி விலகியதன் பின்னர் நேற்று தற்காலிகமாக நால்வர் அமைச்சராக நியமிக்கப்பட்டனர். அதில் அலி சப்ரிலும் ஒருவர்.

இந்நிலையிலேயே அவர் இன்று பதவி துறந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *