பசிலை நாட்டிலிருந்து துரத்தவேண்டும் விமல் ஆவேசம்!
பசில் ராஜபக்ச சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச இந்த நாட்டு மக்கள் ஓன்றுதிரண்டு அவரை நாட்டை விட்டு வெளியேற்றவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை பசில் ராஜபக்ச தனது பாரம்பரியமாக மாற்றிவிட்டார்,ஜனாதிபதியாலோ அல்லது பிரதமராலோ எதுவும் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவிற்கு தெரியாமலே இவை அனைத்தும் இடம்பெறுகின்றன என கருதலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.