உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பாரிய அரசியல் சதித்திட்டம் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு இஸ்லாமிய தீவிரவாதிகளே காரணம் என ஆரம்பத்தில் கருதப்பட்ட போதிலும் அது பாரிய அரசியல் சதிதிட்டத்தின் ஒரு பகுதி என்பது விசாரணைகளின் போதுதெரியவந்துள்ளதாக கர்தினால் மல்கம்ரஞ்சித் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தெரிவித்துள்ளார்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
இலங்கையில் 2019 ஏப்பிரல் 21 ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் 14 நாடுகளை சேர்ந்த 47 வெளிநாட்டவர்கள் -82 சிறுவர்கள் உட்பட 269 பேரை பலிகொண்டதுடன் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த படுகொலையின் முதலாவது எண்ணம் இதனை இது சில இஸ்லாமிய தீவிரவாதிகளின் நடவடிக்கை என்ற அபிப்பிராயத்தை உருவாக்கியது.
எனினும் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் இது பாரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பதை புலப்படுத்தியுள்ளன.
நாங்களும் உண்மையை கண்டறிய முயலும் சிவில் சமூக அமைப்பினரும் தொடர்ச்சியாக வேண்டுகோள்விடுத்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்க தவறியுள்ளது.
தாக்குதல் தொடர்பான உண்மைகளை கண்டறிவது,அதற்கு காரணமானவகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு பதில் நீதிக்காக குரல் கொடுப்பவர்களை துன்புறுத்தி மிரட்டும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
இதன் காரணமாக அந்த பயங்கரமான குற்றம் இடம்பெற்று மூன்று வருடங்களாகிவிட்ட போதிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று என்ன நடந்தது என்பதுகுறித்து நாங்கள் இருட்டிலேயே உள்ளோம்.
இது வேதனையில் சிக்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமைகள் மோசமாக மீறப்பட்டு;ள்ளது.
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆரம்பித்துள்ள ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறைக்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையும் உறுப்பு நாடுகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும், எனவும் உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் பின்னால் உள்ள உண்மைகளை கண்டறிவதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான வழிமுறையொன்றை வகுக்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்.