மொட்டு கட்சியில் இருந்து வெளியேறுகிறது சுதந்திர கட்சி?
எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கொழும்பில் இன்று (05) கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் குழு இந்த தீர்மானத்தை முன்வைத்தது.
இந்த பிரேரணை தொடர்பான இறுதி தீர்மானம் நிறைவேற்று மற்றும் மத்திய குழு கூட்டங்களில் அறிவிக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.