பொலிசாருக்கு மிதி வண்டி!
மேல் மாகாணத்தில் சுற்றுச் சூழல் பொலிஸ் பிரிவிற்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
எரிபொருள் வாகனங்கள் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பிரச்சினையாகும்.
இதற்கு மின்னியல் வாகனங்கள் சிபாரிசு செய்யப்படும் நிலையில், இலங்கை உள்ளிட்ட நாடுகள் மின்னியல் வாகனங்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளன.
எனினும், இலங்கை தற்பொது எதிர்கொண்டுள்ள எரிபொருள் பிரச்சினையை சமாளிக்கவே, தற்போது மேல் மாகாணத்தில் சுற்றுச் சூழல் பொலிசாருக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தரப்பு சுட்டிக்காட்டுகிறது.