இலங்கை அணி வீரரை 28 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூர்!

இந்திய பிரிமியர் லீக் மாபெரும் ஏலத்தில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க பாரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார்.

அதன்படி, 1,075 இலட்சத்திற்கு (இந்திய ரூபாய்) அவர் ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை ரூபாவில் இது 2,877 இலட்சம் ஆகும்.

பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி இவ்வாறு வனிந்து ஹசரங்கவை ஏலத்தில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐபிஎல் 2022 ஆம் ஆண்டுக்கான மாபெரும் ஏலம் தற்போது பெங்களூரில் இடம்பெற்று வருகிறது.

இதுவரை இடம்பெற்ற ஏலத்தில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக 12.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *