இலங்கை நாடாளுமன்றத்தில் களவாடப்படும் உணவுகள்!

நாடாளுமன்றத்தில் அடிக்கடி நடக்கும் உணவுப் பொருட்கள் களவாடப்படுவதை நிறுத்துவதற்காக ஊழியர்களின் பொதிகளை திடீரென சோதனையிடும் நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில், ஊழியர்கள் குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் அதிகளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வரவழைக்கப்படும் உணவு பொருட்களில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் வீண் வீரயம் மற்றும் மோசடிகளால் இழக்கப்படுவதாக கணக்காய்வு விசாரணைகளில் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *