வரலாற்று சாதனைப் படைத்த இந்தியப் பெண்!
இங்கிலாந்தில் இராணுவ அதிகாரியாக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் ஒருவர் தனி ஆளாக தென்துருவத்தை அடைந்து சாதனை படைத்துள்ளார்.
ஹர்பிரீத் சிங் எனும் 32 வயதான பெண் தனி ஒருவராக தென்துருவத்தை அடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளதுடன்,இந்த சாதனையை படைத்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் தனதாக்கியுள்ளார்.
மைனஸ் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் மணிக்கு 96 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றுக்கு மத்தியில் தொடர்ந்து 40 நாட்களாக 1,127 கி.மீ. பயணம் செய்து அவர் தென்துருவத்தை அடைந்துள்ளார்.
இதன்போது குறித்த பெண் தென்துருவத்தை அடைந்த சாதனை நிகழ்வை நேரலையில் வீடியோவாக ஒளிபரப்பியுள்ளார்.