வீட்டிற்கு தெரியாமல் லொட்ஜில் தங்கியிருந்த கள்ளக்காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை!

திருச்சி மாவட்டம் துறையூர் பஸ்நிலையம் அருகே லாட்ஜ் உள்ளது. இந்த லாட்ஜில் திருவண்ணாமலை மாவட்டம் ஏம்பலம் நரிக்குறவர் தெருவை சேர்ந்த சபரீசன்(21) மற்றும் சென்னை தாம்பரம் கடம்பேரி தெற்கு குளக்கரையை சேர்ந்த நிஷாநந்தினி(20) ஆகியோர் கடந்த 29ம் தேதி பைக்கில் வந்து  அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை லாட்ஜ் ஊழியர்கள் அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் இருவரும் வெளியே சென்றுவிட்டு மீண்டும் அறைக்கு வந்தனர். மதிய உணவு அவர்களே வாங்கிக் கொள்வதாக கூறிச்சென்றனர்.

இந்தநிலையில் அறையை காலி செய்ய வேண்டிய நேரம் கடந்து மாலை 5 மணி ஆகியும் அவர்கள் கீழே வராததால் லாட்ஜ் ஊழியர்கள் அவர்களது அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் நீண்டநேரமாகியும் அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்தனர். அப்போது சபரீசன் மற்றும் நிஷா நந்தினி ஆகியோர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் படுக்கையில் கிடந்தனர். இதுகுறித்து லாட்ஜ் ஊழியர்கள் துறையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் நிஷா நந்தினி, சபரீசன் ஆகியோர் கள்ளக்காதல் ஜோடி என்பதும், இவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், தாம்பரம் போலீஸ் நிலையத்தில் நிஷா நந்தினியின் கணவர் ரஞ்சித் தனது மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *