பரவி வரும் மர்ம நோயால் 89 பேர் உயிரிழப்பு!

தென் சூடானில் பரவி வரும்   அடையாளம் காணப்படாத மர்ம நோயால் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஜோங்லே மாகாணத்தில் உள்ள பங்காக்கில் நகரிலேயே  இந் நோயால் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து உலகச் சுகாதார ஸ்தாபனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குறித்த பகுதியில்  தீவிர ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

மேலும் நோய் பாதித்த பகுதியானது  அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *