ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு மணற்சிற்பம் வடிவமைத்த கலைஞர்!


நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசா புரி கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் மணற்சிற்பம் வடிவமைத்துள்ளார்.

ரஜினிகாந்த் தனது 71வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, வி.கே.சசிகலா, நடிகர் கமல்ஹாசன், சச்சின் போன்ற பல பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசா புரி கடற்கரையில் அழகிய மணற்சிற்பம் வடிவமைத்து சுதர்சன் பட்நாயக் அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *