மகனால் கண்கலங்கிய நடிகர் நாகர்ஜூனா!

சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி தெலுங்கு படம் செப்டம்பர் 24ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் ரிலீஸான அன்றே உலக அளவில் ரூ. 10 கோடி வசூல் செய்தது.

தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அமெரிக்காவிலும் லவ் ஸ்டோரிக்கு அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் சக்சஸ் மீட் ஹைதராபாத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜுனா கூறியதாவது, என் மகனை பற்றி என்ன சொல்வது. லவ் ஸ்டோரியில் நாக சைதன்யாவின் நடிப்பை பார்த்து திருப்தி அடைந்துவிட்டேன். நடிகர், ஸ்டார் என்பது இரண்டு வேறு விஷயங்கள், வார்த்தைகள் என்று நான் சேகர் கம்முலாவிடம் கூறினேன். நாக சைதன்யாவை ஸ்டார் ஆக்டராக்கியதற்கு நன்றி சேகர். நீங்களை அவரை புதிய பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி.

நாக சைதன்யா நீங்கள் அருமையாக நடித்திருக்கிறீர்கள். என்னை அழ வைத்தீர்கள், சிரிக்க வைத்தீர்கள். அப்பாவின் கெரியரில் மிகப் பெரிய ஹிட்டான பிரேம் நகர் ரிலீஸாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த படம் ரிலீஸானபோது புயல் வந்தது. 50 ஆண்டுகள் கழித்து புயல் மற்றும் பான்டமிக் இடையே அதே செப்டம்பர் 24ம் தேதி லவ் ஸ்டோரி ரிலீஸாகியிருக்கிறது. லவ் ஸ்டோரி இன்னொரு பிரேம் நகராகி வருகிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *