தந்தைக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு!

தனது தந்தை சந்திரசேகர் மற்றும் அவரது விஜய் மக்கள் இயக்கம், செயல்பாடுகள் மூலம் ஏற்படும் எந்தவொரு விளைவிற்கும் தனது கட்சிக்காரர் பொறுப்பேற்க மாட்டார்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நடிகர் விஜய் ஒப்புதலின்றி, ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் அரசியல் கட்சியும், ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பையும் அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கியுள்ளதற்கும். தனது கட்சிக்காரருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் தனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை கட்சியில் இணைத்துக் கொள்ளவோ, கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து தனது தந்தை உள்பட அவரது அமைப்பின் நிர்வாகிகள் தனது பெயரை பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை 15ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில், தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனின் எந்தவித நடவடிக்கைகளுக்கு தான் அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் அவரது கட்சியிலும் அமைப்பிலும் தன் பெயரையும், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
உயிரைவிட பெரியதல்ல தேர்வு – நடிகர் சூர்யா உருக்கமான அறிவுரை
இந்த சிவில் வழக்கில் தனது தந்தை மற்றும் அவரது அமைப்பின் நிர்வாகிகள் உள்பட 11 பேரை பிரதிவாதிகளாக சேர்த்துள்ளார். இந்த மனு செப்டம்பர் 27ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *