ஆப்கான் மகளிர் கால்பந்தாட்ட அணி பாகிஸ்தானிற்கு தப்பிச்சென்றுள்ளனர்!
ஆப்கானிஸ்தானின் மகளிர் கால்பந்தாட்ட அணியினர் பாகிஸ்தானை சென்றடைந்துள்ளனர்.
தலிபான் காபுலை கைப்பற்றிய ஒருமாதகாலத்தின் பின்னர் அவர்கள் பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர் அவர்கள் மூன்றாவது நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோருவார்கள்.
பயிற்றுவிப்பாளர்கள் குடும்பத்தினர் உட்பட 81 பேர் டோர்ஹாம் எல்லை ஊடாக பாக்கிஸ்தானை சென்றடைந்துள்ளனர்.
மேலும் 34 பேர் இன்று பாக்கிஸ்தானை சென்றடையவுள்ளனர்.
அவர்கள் எல்லையை எப்போது கடந்தார்கள் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.
அவர்களிற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்படும் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.