மேலும் 180 பேர் உயிரிழப்பு 2225 பேருக்கு கொரோனா தொற்று!
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 180 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். 97 ஆண்களும், 83 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 320 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இன்று 2 ஆயிரத்து 225 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.