இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் குறைவடையும்!
எதிர்வரும் இரண்டு வாரங்கில் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணங்கள் குறைவடைய வாய்ப்பிருப்பதாக சுகாதாரப் பிரதிப் பணிப்பாளரும், சுகாதார அமைச்சின் பேச்சாளருமான டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
நாட்டில் 10 நாட்களாக தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ள நிலையில், தொற்றுப் பரவல் குறைந்திருக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்