ஒலிம்பிக் போட்டியில் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட பேஸ்போல்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டது.
தற்பொழுது டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டித் தொடரின் பேஸ் போல் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பேஸ்போல் முழுக்க முழுக்க இலங்கையில் தயாரிக்கப்பட்டது.
பேஸ் போல் உற்பத்தி தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.