30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி!
மேல் மாகாணத்திலுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை வழங்கி நிறைவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கொவிட் தடுப்பு செயலணியுடன், ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.