பாண் விலை 10 ரூபாவால் அதிகரிக்கிறது?
பாண் விலை அடுத்த வாரம் முதல் 10 ரூபாவால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது.
கோதுமை மாவின் விலை 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக அடுத்த வாரத்திலிருந்து பாண் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுகிறது என்ற அறிவிப்பினை அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன இன்று புதன்கிழமை வெளியிட்டார்.
இதுதவிர எரிபொருள் விலை ஏற்றமும் பாணின் விலையேற்றத்தில் தாக்கம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.