நோய் அறிகுறிகள் இருந்தால் செல்ல பிராணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும்!
![](https://i0.wp.com/puthusudar.lk/wp-content/uploads/2021/06/FB_IMG_1624166746020.jpg?resize=720%2C377&ssl=1)
எவரேனும் ஒருவருக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமானால், அவர்கள் செல்ல பிராணிகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் டிலான் ஏ சதரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் ,தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கம் மற்றும் வரிக்குதிரை ஆகியவற்றுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.