கப்பலின் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலின் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தாம் தலைமை வழங்க தயாராக இருப்பதாக பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சிக் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியமையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்தார்.மேலும் அவர் குறிப்பிடுகையில் இந்த நாட்டை யார் ஆட்சி செய்கிறார்கள் என்று தெரியவில்லை கடந்த ஆட்சியாளர்களை விட இந்த ஆட்சி மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.