நுவரெலியா ஆடைதொழிற்சாலையில் 149 பேருக்கு கொரோனா 300 பேர் தனிமைப்படுத்தலில்!
நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் 149 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்பை பேணிய சுமார் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.