ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாத்தாவாகினார்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி செவ்வந்தி ராஜபக்ஷ ஆகியோருக்கு மகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு இன்று அமெரிக்காவில் வைத்து குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு நெருக்கமான ஒரு வட்டாரம், தனது மகனுக்காக இந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுநோய் காரணமாக இதை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது என்று தெரிவிக்கப்படுகின்றது.