ரிஷாத் மற்றும் அவரது சகோதரரை 72 மணித்தியாலம் தடுத்து வைத்து விசாரணை!
இன்று (24) அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அரவது சகோதரர் ரியாஜ் பதியுதீன் அகியோரை தடுத்து காவலில் விசாரிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுப்புக்காவல் உத்தரவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவொன்று பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.