குறைந்த வருமானம் உடைய நோன்பாளிகளுக்கு நிவாரணம்!
ரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை பெற்றுக் கொள்வதற்கு இறுதி திகதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி அதிகாரிகளை தொடர்ப்பு கொண்டு இந்த தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.