ஆடையணிந்த பெண்ணை தொடுதல், தடவுதல் பாலியல் குற்றம் இல்லையாம்!
ஆடையணிந்த பெண் ஒருவரை தொடுதல், தடவுதல் போன்றவை பாலியல் குற்றம் இல்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரின் வழக்கு விசாரணை, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு முன் நடந்தது. இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த தீர்ப்பில், ‘பாலியல் ரீதியாக துன்புறுத்த நினைக்கும் ஒருவர், எதிர்பாலினத்தவரை ஆடை இல்லாத நிலையில், தோலுடன் தோல் தொட்டு தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என்று கருதப்படும்.