சூதாட்டத்தில் மனைவியை விட்டுக் கொடுத்த கொடூரக் கணவன்!
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சூதாட்டத்திற்கு அடிமையான 36 வயது நபர், தனது மனைவியை பந்தயம் கட்டி தனது நண்பர்களிடம் இழந்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்தபெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.
இதையடுத்து, இந்த சம்பவம் பீகார் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்தது, ஹசங்கஞ்ச் குடியிருப்பாளரான ரவி, தனது மனைவி ஆஷாவை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ய தனது நண்பர்களை அனுமதித்துள்ளார்.
மேலும், சமீபத்திய சூதாட்டத்தின்போது, தனது மனைவியை பந்தயம் கட்டி தன் நண்பர்களிடம் அவளை இழந்தார்.
அந்த பெண், அவனின் நண்பர்களுடன் செல்ல மறுத்தபோது, அவன் மனைவி மீது ஆசிட்வீசி தாக்க முயன்று, தன் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளான்.
பின்னர் அந்த பெண் தனது கணவனின் வீட்டிலிருந்து தப்பி தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்று, தீபக் சிங் என்ற சமூக ஆர்வலரின் உதவியை நாடினார். இதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
ஆஷாவுக்கும் ரவிக்கும் திருமணமாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டன, ஆனால் ரவியின் குடிப்பழக்கம் காரணமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
கருத்தரிக்க முடியாததால் ரவி தன்னை உடல் ரீதியாக சித்திரவதை செய்வதாக ஆஷா போலீசாரிடம் தெரிவித்தார்.