வத்தளையில் நாளை 18 மணிநேர நீர்வெட்டு!

வத்தள பகுதியில் சில பகுதிகளுக்கு நாளை (03) காலை 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஹேகித்த வீதியில் நீர் குழாய் திருத்த வேளை காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதனடிப்படையில் நாளை காலை 10 மணி முதல் நாளை மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் நீர்வெட்டு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. 

ஹேகித்த, பள்ளியவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியில் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *